கோவை டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை!

கோவையில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவில்பாளையம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காவல்துறை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகத் தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ராக் செய்து விசாரித்த போது தொலைப்பேசியில் அழைத்தவர் விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர்(51) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வெளியே வந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...