கோவை குழந்தைகள் காப்பத்தில் போக்சோ விழிப்புணர்வு - நீதிபதி பங்கேற்பு

கோவை காந்திமாநகரில் உள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று நீதிபதி கே.எஸ்.எஸ்.சிவா ஆய்வு மேற்கொண்டு, போக்சோ சட்டம் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: காப்பகங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பது நம்முடைய தலையாய கடமை. குழந்தைகள் நலன் சார்ந்த அரசாங்க துறைகள், தன்னார்வலர்கள் இப்பணியை செய்துவருகின்றனர். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் காப்பகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை ஆவணம் செய்வது அவசியம்.



அதனடிப்படையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரான, சார்பு நீதிபதியான கே எஸ் எஸ் சிவா, கோவை மாவட்டம் காந்தி மாநகரில் அமைந்துள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று குழந்தைகளுடன் உரையாடினார். போக்சோ சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.



அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிகள் அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பக தலைமை அலுவலர்கள் குழந்தைகள், நலக்குழுவினை சார்ந்தவர்கள், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பெண் குழந்தைகளை பாதுகாப்பது அவசியம் என்ற அடிப்படையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...