முதல்வர் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தாராபுரம் நகர திமுக சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திமுக நகர இளைஞரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு அன்புநிதி என பெயர் சூட்டி பரிசு பெட்டகம் மற்றும் குழந்தையின் அம்மாவிற்கு சேலை மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து 2வது வார்டில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இதையடுத்து, நஞ்சம்பாளையம் சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, சிலேடு, பென்சில், மரக்கன்றுகள் ஆகியவற்றை திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் மற்றும் நகர துணைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

தாராபுரத்தில் உள்ள 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...