கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - புகைப்பட கலைஞர் கைது

கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 1,100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார், க.க.சாவடி அருகே உள்ள நவக்கரை பகுதியில் ரோந்துச் சென்றனர்.

அப்போது அங்குச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக கல்லூரி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கனேசன் மகன் அருண்பிரசாத் (29) என்பதும், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றிக் கொண்டு, வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து, அதை கேரளாவிலும், எல்லையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...