கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - புகைப்பட கலைஞர் கைது

கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 1,100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை க.க.சாவடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார், க.க.சாவடி அருகே உள்ள நவக்கரை பகுதியில் ரோந்துச் சென்றனர்.

அப்போது அங்குச் சாலையில் சந்தேகத்திற்கிடமாக கல்லூரி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கனேசன் மகன் அருண்பிரசாத் (29) என்பதும், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றிக் கொண்டு, வட மாநிலங்களிலிருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து, அதை கேரளாவிலும், எல்லையில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...