கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌முனைவோர்கள்‌ பங்கு பெற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.

வேளாண் விற்பனை மற்றும்‌ வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாட்கள்(27,28ஆம் தேதி) நடைபெற்றது.

முனைவர்‌ சோமசுந்தரம்‌, இயக்குநர்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் பயிற்சியைத் துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகள் குறித்து விரிவுரை வழங்கினார்‌. ஞானசம்பந்தம்‌, தலைமை செயல்‌ அதிகாரி, தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌ வரவேற்றார். முனைவர்‌ மலர்கொடி இணைப்‌ பேராசிரியர்‌, விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை நன்றியுரை ஆற்றினார்‌.



வேளாண் மற்றும்‌ வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌. வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள், வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்புக்கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தைப் பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌. இப்பயிற்சிக்குப் பின்‌ இறுதியில்‌ தோந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌, ரூ.2லட்சம்‌ வரையிலான மானியமும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌ தொழில்‌ நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...