கோவை வேளாண் பல்கலையில் வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌முனைவோர்கள்‌ பங்கு பெற்றனர்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ இரண்டு நாட்கள் நடைபெற்ற தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.

வேளாண் விற்பனை மற்றும்‌ வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தொழில்‌ முனைவோருக்கு வேளாண் தொழில்‌ நிறுவுவதற்கான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாட்கள்(27,28ஆம் தேதி) நடைபெற்றது.

முனைவர்‌ சோமசுந்தரம்‌, இயக்குநர்‌, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் பயிற்சியைத் துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகள் குறித்து விரிவுரை வழங்கினார்‌. ஞானசம்பந்தம்‌, தலைமை செயல்‌ அதிகாரி, தொழில்‌ நுட்ப வணிக காப்பகம்‌ வரவேற்றார். முனைவர்‌ மலர்கொடி இணைப்‌ பேராசிரியர்‌, விவசாய மற்றும்‌ கிராமப்புற மேலாண்மை நன்றியுரை ஆற்றினார்‌.



வேளாண் மற்றும்‌ வேளாண் சார்ந்த துறைகளிலிருந்து 30 தொழில்‌ முனைவோர்கள்‌ இப்பயிற்சியில்‌ பங்கு பெற்றனர்‌. வணிகத்திட்டம்‌ தயாரித்தல்‌, வணிகத்திற்கான செலவு பகுப்பாய்வு, முதலீட்டுத்திட்டம்‌, தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ செயல்பாடுகள், வணிகம்‌ சார்ந்த சேவைகள்‌, உணவு பதப்படுத்துதல்‌ மற்றும்‌ மதிப்புக்கூட்டல்‌ போன்ற தலைப்புகளை மையமாகக்‌ கொண்டு இப்பயிற்சியானது நடைபெற்றது.

தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ தங்களின்‌ தொழில்‌ முனைவோர்‌ பயணத்தைப் பயிற்சியாளர்களிடம்‌ பகிர்ந்து கொண்டனர்‌. இப்பயிற்சிக்குப் பின்‌ இறுதியில்‌ தோந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலான கடனுதவியும்‌, ரூ.2லட்சம்‌ வரையிலான மானியமும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌, இவ்வகை பயிற்சியானது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌ தொழில்‌ நுட்ப உதவியுடன்‌ தமிழ்நாடு முழுவதும்‌ நடத்தப்பட உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...