உடுமலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ - தீத்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள மறையூர் காந்தலூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஏக்கர் பரப்பில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான மறையூர் காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



இதனால், அரிய வகை மூலிகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.



மேலும் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் உடுமலை வனத்துறையினர், கோடந்தூர் ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, வனப்பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...