உடுமலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ - தீத்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள மறையூர் காந்தலூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஏக்கர் பரப்பில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான மறையூர் காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



இதனால், அரிய வகை மூலிகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.



மேலும் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் உடுமலை வனத்துறையினர், கோடந்தூர் ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, வனப்பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...