'கனிம வளக் கடத்தலை தடுக்காவிட்டால்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை தடுக்கவிட்டால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள 11 சோதனைச் சாவடிகளில் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று பொள்ளாச்சி அருகே நடந்த கனிமவள கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.



கோவை: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதைத் தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை தமிழக அரசு கேரளாவுக்கு தாரைவார்த்து வருவதாகவும், இன்னும் 20 நாட்களுக்குள் கனிம வளங்களை லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்காவிட்டால் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி உள்ள 11 சோதனைச் சாவடுகளிலும் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்றார். மேலும், எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளாவுக்கு செல்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் அவர் சவால்விட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...