'கனிம வளக் கடத்தலை தடுக்காவிட்டால்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை தடுக்கவிட்டால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள 11 சோதனைச் சாவடிகளில் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று பொள்ளாச்சி அருகே நடந்த கனிமவள கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.



கோவை: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதைத் தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை தமிழக அரசு கேரளாவுக்கு தாரைவார்த்து வருவதாகவும், இன்னும் 20 நாட்களுக்குள் கனிம வளங்களை லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்காவிட்டால் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி உள்ள 11 சோதனைச் சாவடுகளிலும் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்றார். மேலும், எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளாவுக்கு செல்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் அவர் சவால்விட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...