'கனிம வளக் கடத்தலை தடுக்காவிட்டால்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை தடுக்கவிட்டால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள 11 சோதனைச் சாவடிகளில் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று பொள்ளாச்சி அருகே நடந்த கனிமவள கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.



கோவை: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதைத் தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை தமிழக அரசு கேரளாவுக்கு தாரைவார்த்து வருவதாகவும், இன்னும் 20 நாட்களுக்குள் கனிம வளங்களை லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்காவிட்டால் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி உள்ள 11 சோதனைச் சாவடுகளிலும் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்றார். மேலும், எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளாவுக்கு செல்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் அவர் சவால்விட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...