'கனிம வளக் கடத்தலை தடுக்காவிட்டால்..!' - பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கனிமவளக் கொள்ளையை தடுக்கவிட்டால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள 11 சோதனைச் சாவடிகளில் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று பொள்ளாச்சி அருகே நடந்த கனிமவள கடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.



கோவை: கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்வதை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்வதைத் தடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை தமிழக அரசு கேரளாவுக்கு தாரைவார்த்து வருவதாகவும், இன்னும் 20 நாட்களுக்குள் கனிம வளங்களை லாரிகளில் கடத்திச் செல்வதை தடுக்காவிட்டால் பொள்ளாச்சி பகுதியில் சுற்றி உள்ள 11 சோதனைச் சாவடுகளிலும் பாஜக தொண்டர்களுடன் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்றார். மேலும், எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளாவுக்கு செல்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் அவர் சவால்விட்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்திராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேசன், எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமார், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...