மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கடனுதவி - பொள்ளாச்சி எம்.பி வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தலைமையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம், முதல்வர் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு ஊரில் வசிக்கும் பெண்களில் 25 சதவீத பெண்கள் குழுக்களில் இருந்திட வேண்டும்.



பத்தாண்டுகளுக்கு மேலான உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், 15 ஆண்டுகள் செயல்படும் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கியில் சாதாரணமாக கடனுதவி பெறக் குறிப்பிட்ட தொகை பெற, சொத்தை அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும் என்ற நிலை மாறி எவ்வித அடமானம் இல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...