100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று செம்மொழி பூங்கா வரை பேரணி சென்றது.


Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து இந்த பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதிமொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவிநாசி சாலை, எல்லை அம்மன் கோவில், காந்திபுரம் வழியாக செம்மொழி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுமக்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதையும், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...