கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்கப்படும். 15 நாட்கள் மட்டும் இச்சேவை செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக அபுதாபிக்கு மட்டும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை Jazeera என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள விமான சேவை நேரம் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.





இந்த பணிகள் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக கோவை-குவைத் இடையே விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த விமான சேவை நிரந்தரமானது அல்ல. 15 நாட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...