மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கடனுதவி - பொள்ளாச்சி எம்.பி வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தலைமையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம், முதல்வர் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு ஊரில் வசிக்கும் பெண்களில் 25 சதவீத பெண்கள் குழுக்களில் இருந்திட வேண்டும்.



பத்தாண்டுகளுக்கு மேலான உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், 15 ஆண்டுகள் செயல்படும் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கியில் சாதாரணமாக கடனுதவி பெறக் குறிப்பிட்ட தொகை பெற, சொத்தை அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும் என்ற நிலை மாறி எவ்வித அடமானம் இல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...