மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கடனுதவி - பொள்ளாச்சி எம்.பி வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தலைமையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம், முதல்வர் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு ஊரில் வசிக்கும் பெண்களில் 25 சதவீத பெண்கள் குழுக்களில் இருந்திட வேண்டும்.



பத்தாண்டுகளுக்கு மேலான உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், 15 ஆண்டுகள் செயல்படும் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கியில் சாதாரணமாக கடனுதவி பெறக் குறிப்பிட்ட தொகை பெற, சொத்தை அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும் என்ற நிலை மாறி எவ்வித அடமானம் இல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...