மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கடனுதவி - பொள்ளாச்சி எம்.பி வழங்கல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தலைமையில், பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய பொள்ளாச்சி எம்.பி, சண்முகசுந்தரம், முதல்வர் இந்தாண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஒரு ஊரில் வசிக்கும் பெண்களில் 25 சதவீத பெண்கள் குழுக்களில் இருந்திட வேண்டும்.



பத்தாண்டுகளுக்கு மேலான உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், 15 ஆண்டுகள் செயல்படும் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்படுகிறது. வங்கியில் சாதாரணமாக கடனுதவி பெறக் குறிப்பிட்ட தொகை பெற, சொத்தை அடமானம் வைத்தால் தான் கடன் கிடைக்கும் என்ற நிலை மாறி எவ்வித அடமானம் இல்லாமல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இதனை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...