திருப்பூரில் மூங்கில் கூடை கடையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான கூடைகள் எரிந்து சாம்பல்

திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி தியேட்டர் அருகே, பாப்பாத்தி என்பவரின் மூங்கில் கூடை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது. திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், மூங்கில் கூடைகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(55). இவர் திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி திரையரங்கம் அருகே மூங்கில் மூலம் செய்யப்படும் கூடைகளை பல்வேறு பகுதிகளிலிருந்து வாங்கி இங்கிருந்து விற்பனை செய்து வருகிறார். மேலும் சொந்தமாகவும், மூங்கில் கூடைகளைத் தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.

இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இந்த மூங்கில் கூடைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் இன்று மதியம் பாப்பாத்தி கடைக்கு வெளியே அமர்ந்து மூங்கில் கூடையைப் பின்னிக் கொண்டிருந்தார்.



அப்போது கடைக்குள் இருந்து கரும் புகை வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் உடனடியாக தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் உள்ளே மூங்கில் கூடைகள் இருந்ததால் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது.

இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் தீய எரியும் பகுதிக்குச் செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...