கோத்தகிரி அருகே நள்ளிரவில் உலா வரும் சிறுத்தை - குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.



பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளிலே சுற்றித் தெரிந்து வருவதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சிறுத்தை வந்துள்ளது.



இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும், சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...