கோத்தகிரி அருகே நள்ளிரவில் உலா வரும் சிறுத்தை - குடியிருப்புவாசிகள் அச்சம்

கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.



பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளிலே சுற்றித் தெரிந்து வருவதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியிலிருந்து அரவேனு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒரு சிறுத்தை வந்துள்ளது.



இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து செல்லும், சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...