பல்லடத்தில் குடிபோதையில் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபான கடையில் ராஜ்கமல், தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பால்காரர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேடபாளையம் ஸ்டாலின் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் உட்பட நான்கு பேரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்கமல் தான் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக நண்பர்களான தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மற்றொரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.



இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ராஜ் கமலை பல்லடம் போலீசார் கைது செய்தனர். மதுபோதையில், உடன் சென்ற நண்பர்களை சக நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...