பல்லடத்தில் குடிபோதையில் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபான கடையில் ராஜ்கமல், தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பால்காரர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேடபாளையம் ஸ்டாலின் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் உட்பட நான்கு பேரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்கமல் தான் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக நண்பர்களான தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மற்றொரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.



இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ராஜ் கமலை பல்லடம் போலீசார் கைது செய்தனர். மதுபோதையில், உடன் சென்ற நண்பர்களை சக நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...