மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா - பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளை ஏற்று கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அக்கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை வடகிழக்கு மாவட்டம் சார்பில் சித்ரா பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினர்.

வடகிழக்கு மாவட்ட செயலாளர் மனோன்ரம்யன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர். அனுஷாரவி, மண்டல செயலாளர்கள் ரங்கநாதன், சித்திக், செல்வ தங்கம், ஸ்ரீதர், அருணா, ரம்யா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...