மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா - பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளை ஏற்று கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அக்கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை வடகிழக்கு மாவட்டம் சார்பில் சித்ரா பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினர்.

வடகிழக்கு மாவட்ட செயலாளர் மனோன்ரம்யன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர். அனுஷாரவி, மண்டல செயலாளர்கள் ரங்கநாதன், சித்திக், செல்வ தங்கம், ஸ்ரீதர், அருணா, ரம்யா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...