மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழா - பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளை ஏற்று கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அக்கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை வடகிழக்கு மாவட்டம் சார்பில் சித்ரா பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினர்.

வடகிழக்கு மாவட்ட செயலாளர் மனோன்ரம்யன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர். அனுஷாரவி, மண்டல செயலாளர்கள் ரங்கநாதன், சித்திக், செல்வ தங்கம், ஸ்ரீதர், அருணா, ரம்யா உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...