மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - தாராபுரம் அணி அசத்தல்

தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அட்டவனை மஜித் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது.



இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளிலிருந்து சுமார் 11 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை YMBA தாராபுரம் அணியினரும், இரண்டாம் பரிசை திருப்பூர் நஞ்சப்பாபள்ளி மாணவர்களும், முன்றாம் பரிசை யங்க்ஸ்டர் கொங்குநாடு தாராபுரம் அணியினரும் மற்றும் நான்காம் பரிசை பாண்டிய நாடு திருப்பூர் அணியினரும் பெற்றனர்.



வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக தேர்தெடுக்கப்பட்ட ஹரி என்பவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...