தொழில்துறையில் தமிழகம் முதலிடம் - கோவையின் பங்கு என்ன? - ஒரு பார்வை

மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.



கோவை: இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்துவருவதற்கு முக்கிய காரணமான மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழிற்துறையின் வெற்றிப்பின்னணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 16.6% தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதனடிப்படையிலேயே இன்று தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அரியணையை அலங்கரித்திருக்கின்றது.

தமிழ்நாட்டின் இந்த பெருமைக்கும் வெற்றிக்கும் வித்திட்ட தொழில் நகரங்களில் முக்கியமானது, சொல்லாப்போனால் முதன்மையானது கோயமுத்தூர் தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் குடிசை, சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் என தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கோயமுத்தூரின் தொழில் துறை, தொழில் நகரங்களின் முன்னோடியாக பார்ப்பதன் பின்னணி சுவாரஸ்யமானது.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் இன்று நம் நாட்டில் வேரூன்ற, நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட மின் மோட்டார் பம்பை நாட்டிலேயே முதன்முதலாக தயாரித்து சந்தைப்படுத்தியது கோயமுத்தூர் தொழில் நகரம்தான். மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.

தொழில்துறையில் துணிச்சலான மேலாண்மை திறன், கடின உழைப்பு, தரமான தயாரிப்பு, எதிர்கால திட்டமிடல், நவீன சார்பு உள்ளிட்டவை கோயமுத்தூர் தொழில் நகரத்தின் வெற்றிக்கான குறியீடுகள். இப்படிப்பட்ட தனித்துவமான கோயமுத்தூர், தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள தன்னை காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திக் (அப்டேட்) கொள்வது அவசியம். தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சவால்களை எதிர்த்து சாதனை படைக்க நவீன தொழில்நுட்பத்தை கோயம்பத்தூர் தொழில் நகரம் நாடி இருக்கிறது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...