தொழில்துறையில் தமிழகம் முதலிடம் - கோவையின் பங்கு என்ன? - ஒரு பார்வை

மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.



கோவை: இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்துவருவதற்கு முக்கிய காரணமான மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழிற்துறையின் வெற்றிப்பின்னணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 16.6% தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதனடிப்படையிலேயே இன்று தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அரியணையை அலங்கரித்திருக்கின்றது.

தமிழ்நாட்டின் இந்த பெருமைக்கும் வெற்றிக்கும் வித்திட்ட தொழில் நகரங்களில் முக்கியமானது, சொல்லாப்போனால் முதன்மையானது கோயமுத்தூர் தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் குடிசை, சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் என தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கோயமுத்தூரின் தொழில் துறை, தொழில் நகரங்களின் முன்னோடியாக பார்ப்பதன் பின்னணி சுவாரஸ்யமானது.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் இன்று நம் நாட்டில் வேரூன்ற, நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட மின் மோட்டார் பம்பை நாட்டிலேயே முதன்முதலாக தயாரித்து சந்தைப்படுத்தியது கோயமுத்தூர் தொழில் நகரம்தான். மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.

தொழில்துறையில் துணிச்சலான மேலாண்மை திறன், கடின உழைப்பு, தரமான தயாரிப்பு, எதிர்கால திட்டமிடல், நவீன சார்பு உள்ளிட்டவை கோயமுத்தூர் தொழில் நகரத்தின் வெற்றிக்கான குறியீடுகள். இப்படிப்பட்ட தனித்துவமான கோயமுத்தூர், தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள தன்னை காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திக் (அப்டேட்) கொள்வது அவசியம். தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சவால்களை எதிர்த்து சாதனை படைக்க நவீன தொழில்நுட்பத்தை கோயம்பத்தூர் தொழில் நகரம் நாடி இருக்கிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...