தொழில்துறையில் தமிழகம் முதலிடம் - கோவையின் பங்கு என்ன? - ஒரு பார்வை

மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.



கோவை: இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்துவருவதற்கு முக்கிய காரணமான மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழிற்துறையின் வெற்றிப்பின்னணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 16.6% தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதனடிப்படையிலேயே இன்று தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அரியணையை அலங்கரித்திருக்கின்றது.

தமிழ்நாட்டின் இந்த பெருமைக்கும் வெற்றிக்கும் வித்திட்ட தொழில் நகரங்களில் முக்கியமானது, சொல்லாப்போனால் முதன்மையானது கோயமுத்தூர் தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் குடிசை, சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் என தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கோயமுத்தூரின் தொழில் துறை, தொழில் நகரங்களின் முன்னோடியாக பார்ப்பதன் பின்னணி சுவாரஸ்யமானது.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் இன்று நம் நாட்டில் வேரூன்ற, நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட மின் மோட்டார் பம்பை நாட்டிலேயே முதன்முதலாக தயாரித்து சந்தைப்படுத்தியது கோயமுத்தூர் தொழில் நகரம்தான். மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.

தொழில்துறையில் துணிச்சலான மேலாண்மை திறன், கடின உழைப்பு, தரமான தயாரிப்பு, எதிர்கால திட்டமிடல், நவீன சார்பு உள்ளிட்டவை கோயமுத்தூர் தொழில் நகரத்தின் வெற்றிக்கான குறியீடுகள். இப்படிப்பட்ட தனித்துவமான கோயமுத்தூர், தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள தன்னை காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திக் (அப்டேட்) கொள்வது அவசியம். தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சவால்களை எதிர்த்து சாதனை படைக்க நவீன தொழில்நுட்பத்தை கோயம்பத்தூர் தொழில் நகரம் நாடி இருக்கிறது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....