வழக்கில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவர், சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவு

குன்னூரில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - திமுகவினர் மோதிக் கொண்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்பட மூவர், எடப்பள்ளி பகுதியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 மாவட்ட நீதிபதி உத்தரவு.


நீலகிரி: நீலகிரியில் வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் தலா ரூ.10,000 செலுத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டேண்மெண்ட் போர்டில் 7 வார்டுகள் உள்ளன. இந்த போர்டுக்கு ராணுவ அதிகாரி தலைவராக இருக்கும் நிலையில் துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நியமனம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 3 அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் திமுக துணை தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்க சென்றனர்.

அப்போதைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கா.ராமசந்திரன் மற்றும் குன்னூர் நகர் மன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோர் அழைத்து சென்ற போது ஆத்திரமடைந்த அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதுடன் கண்டோண்மெண்ட் அலுவலகத்தையும் சேதப்படுத்தினர்.

அந்த சம்பவத்தில் அப்போதைய கண்டோண்மெண்ட் துணை தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த பாரதியார் உள்பட அதிமுகவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் திமுக தரப்பில் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து அமைச்சர் கா.ராமசந்திரன், அப்போதைய கண்டோண்மெண்ட் கவுன்சிலர் வினோத் மற்றும் அதிமுகவை சேர்ந்த பாரதியார் ஆகியோர் குன்னூர் அடுத்த எடபள்ளியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த வழக்கு விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...