கோவையில் மத நல்லிணக்க மருத்துவ முகாம் - மகளிர், முதியோர் பங்கேற்பு

கோவையில் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட மதநல்லிணக்க மருத்துவ முகாமில் பெண்கள், முதியோர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


கோவை: மத நல்லிணக்கம், மனிதநேயம் வலியுறுத்தி வழக்கமாக கூட்டம், கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கோவை சற்று வித்தியாசமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மத நல்லிணக்க மனிதநேய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் எல்.சி.மருத்துவமனை அறக்கட்டளை இணைந்து இலவச எண்டோஸ்கோபி ஸ்கிரீனிங் மற்றும் மகளிர் நலம் தொடர்பான மருத்துவ முகாம் நடத்தினர்.



பேரூர் சாந்தலிங்க மருத்தாச்சல அடிகளார் தமிழ் கல்லூரி வளாகத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், எல் சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்கள் வித்யா, ராஜன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.



நவீன உலகில் மாறிவரும் வாழ்வியல் நடைமுறையில் எண்ணற்ற இன்னலுக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகின்றனர். அதனடிப்படையில், சமீபத்திய பிரச்சனைகளில் வயிறு, இரைப்பை கோளாறு, வயிற்று ஹெர்னியா உள்ளிட்ட நோய்களும், மகளீர் நலன் சார்ந்த பரிசோதனைகளும் இந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டது.

கட்டணமில்லாமல் நடத்தப்பட்ட இந்த முகாமில், பெண்கள், முதியோர் உட்பட பலர் பங்குபெற்று பயனடைந்தனர். தொடர்ந்து இதேபோல தமிழகம் முழுவதும் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாமை நடத்தவுளளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...