போதைக்கு எதிராக உடுமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்!

உடுமலை அருகேயுள்ள குரல்குட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒருகோடி கையெழுத்து இயக்கத்தில், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்.



உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குரல்குட்டை பகுதியில் போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கி நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், நிதிஷ், தர்சன், பிரபாகரன், செல்லமுத்து, சுர்ஜித் உட்பட மக்கள் மத்தியில் துண்டறிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.



குரல்குட்டை, நால்ரோடு, நெசவாளர் பகுதி, காமாட்சி அம்மன் கோயில் உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வரவேற்று கையெழுத்திட்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...