பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழா - 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 3,000-கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பல்லடம் அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபடி நவகிரக கோட்டையில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



மாலை 6 மணிக்கு கோ பூஜை, முதற்கால வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாராதனை சிவன் - பார்வதி திருக்கல்யாண நிகழ்வுடன் தொடங்கியது.



இந்நிலையில், ஐந்து கால வேள்வி பஜனை, ஞான குருவின் சத்சங்கம் சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் முழு இரவு பிராத்தனைகளோடு காலை 6 மணி வரை சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் குழந்தைகள் சிவபெருமான் பார்வதி வேடம் அணிந்து பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதிகாலை 6:00 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி சிவபெருமான் மகாபலி அம்மையப்பர் திருவீதி உலா ரோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைந்தது.



இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...