பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழா - 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 3,000-கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பல்லடம் அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபடி நவகிரக கோட்டையில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



மாலை 6 மணிக்கு கோ பூஜை, முதற்கால வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாராதனை சிவன் - பார்வதி திருக்கல்யாண நிகழ்வுடன் தொடங்கியது.



இந்நிலையில், ஐந்து கால வேள்வி பஜனை, ஞான குருவின் சத்சங்கம் சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் முழு இரவு பிராத்தனைகளோடு காலை 6 மணி வரை சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் குழந்தைகள் சிவபெருமான் பார்வதி வேடம் அணிந்து பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதிகாலை 6:00 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி சிவபெருமான் மகாபலி அம்மையப்பர் திருவீதி உலா ரோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைந்தது.



இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...