உடுமலையில் 100 ஆண்டு பழமையான பாதையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமைவாய்ந்த பாதையை, தார்ச்சாலையாக மாற்றகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றியம் பள்ளபாளையத்தில் 100 ஆண்டு பழமையான இட்டேரி பாதையை தார்சாலையாக மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளபாளையம் நால்ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை ஒன்றிய பொருளாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ரத்னகுமார், இமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை ஒன்றியச் செயலாளர் தமிழ்த்தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜித்குமார், சி.ஐ.டி..யூ செயலாளர் S.ஜெகதீசன், முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இட்டேரி பாதையை, தார்ச்சாலையாக மாற்றக்கோரி சுந்தரம் மாரிமுத்து துரைசாமி, செந்தில்குமார், பட்டீஸ்வரன், பெருமாள்சாமி, துரையரசன், ராமு, உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

கோரிக்கையை உடுமலை ஊராட்சிஒன்றிய நிர்வாகம் விரைவாக நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...