உடுமலை அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.1 கோடி நஷ்டம்

உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் தனியார் தென்னைநார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தேங்காய் மட்டைகளிலிருந்து, தேங்காய் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.



மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மட்டைகள் மற்றும் தேங்காய் நார் பண்டல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதைப்பார்த்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.



தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் நார்கள் காய்ந்த நிலையில் இருந்ததால், மளமளவென்று தீ பரவியது.

இதையடுத்து, உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.



இந்தத் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டை மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீவிபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் அப்பகுதி முழுவதும் கருமேகம் சூழ்ந்ததுபோல் காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...