உடுமலை அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.1 கோடி நஷ்டம்

உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் தனியார் தென்னைநார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தேங்காய் மட்டைகளிலிருந்து, தேங்காய் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.



மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மட்டைகள் மற்றும் தேங்காய் நார் பண்டல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதைப்பார்த்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.



தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் நார்கள் காய்ந்த நிலையில் இருந்ததால், மளமளவென்று தீ பரவியது.

இதையடுத்து, உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.



இந்தத் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டை மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீவிபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் அப்பகுதி முழுவதும் கருமேகம் சூழ்ந்ததுபோல் காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...