உடுமலை அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.1 கோடி நஷ்டம்

உடுமலை அருகே மைவாடி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் தனியார் தென்னைநார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தேங்காய் மட்டைகளிலிருந்து, தேங்காய் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.



மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த மட்டைகள் மற்றும் தேங்காய் நார் பண்டல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதைப்பார்த்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.



தேங்காய் மட்டைகள் மற்றும் தேங்காய் நார்கள் காய்ந்த நிலையில் இருந்ததால், மளமளவென்று தீ பரவியது.

இதையடுத்து, உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.



இந்தத் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான தேங்காய் நார், தேங்காய் மட்டை மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீவிபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் அப்பகுதி முழுவதும் கருமேகம் சூழ்ந்ததுபோல் காட்சியளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...