தாராபுரத்தில் பருத்தி மறைமுக ஏலம் - ரூ.1.38 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு சராசரி விலையாக ரூ.8050-க்கு விற்பனையானது. மொத்தம் 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1.38 கோடிக்கு ஏலம் போனது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 547 விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல், பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் வந்திருந்தனர். மறைமுக ஏலத்தில் பங்கேற்ற வணிகர்கள், பருத்தியை அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8699-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 6850-க்கும் சராசரி விலையாக ரூ. 8050-க்கும் ஏலம் எடுத்தனர்.

இந்த வார ஏலத்திற்கு 5, 464 மூட்டை பருத்திகள் வந்திருந்தன. 176.728 குவிண்டால் பருத்தியானது ரூ.1,38,99,520க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் 15வியாபாரிகள் மறைமுக பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனர். இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...