மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகியின் கார் தீவைத்து எரிப்பு - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி சையது முகமது அலி, தனது வீட்டு முன்பு நிறுத்திய காரை காரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவன்புரம் காலனி, வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி.

இவர் திமுகவின் தொழிற்சங்கமான எல்.பி.எப் அமைப்பில் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். மேலும், இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் மற்றும் வாடகை கார் ஓட்டும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சையது முகமது அலி, தனது வீட்டின் முன்பு மகேந்திரா கார் ஒன்றை நேற்று விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தார்.



இன்று காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்தக் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து, தீவைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் வாடகை கார் நிறுத்துவதில் அங்குள்ள சிலருக்கும் சையது முகமது அலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...