பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சோகம் - போலீசார் விசாரணை

பல்லடம் - மங்கலம் சாலையில் கட்டுமான பணியின்போது டிரில்லிங் இயந்திரத்தின் ஒயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள ஆலூத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துக்குமார். இவருக்கு மைதிலி என்ற மனைவியும், மவுலிஷ் என்ற மகனும் உள்ளனர்.



இந்நிலையில், கூலி தொழிலாளியான முத்துக்குமார், பல்லடம் - மங்கலம் சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே இன்று பிற்பகல் ஊட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழி எடுக்கும் பணியின் போது ட்ரில்லிங் மெஷினை பயன்படுத்தி உள்ளனர்.



எதிர்பாராத விதமாக டிரில்லிங் மிஷின் மின்சார கம்பி அறுந்ததால் முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.



அவருடன் பணிபுரிந்த மற்றொரு ஊழியர் மின் இணைப்பை துண்டிக்க முயற்சித்தும், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் இணைப்பை துண்டிக்க சென்றதால் முத்துக்குமாருடன் பணியாற்றிய சசிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமாரின் உடலை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...