கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை - துடியலூர் போலீசார் தீவிர விசாரணை!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் வகுப்பறையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சக மாணவிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ஸ்ரீ வர்ஷா (வயது20). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

ஸ்ரீ வர்ஷாவிற்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்ததாக தெரிகிறது. ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பில்லை என அவர் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஸ்ரீவர்ஷா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக மாணவ, மாணவிகள் ஸ்ரீ வர்ஷாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி ஸ்ரீ வர்ஷா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...