நல்லது நடக்க தமிழக, கேரள எம்.பி.க்களே காரணம்..! - ஈரோட்டில் எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு!

நாடாளுமன்றத்தில் நடக்கும் நல்லவைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எம்.பிக்களால் மட்டுமே காரணம். ஆந்திரா,தெலங்கானா எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருவதாக எம்பி சு.வெங்கடேசன் பேச்சு.


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.



இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்களான கோவையைச் சேர்ந்த பி. ஆர்.நடராஜன், மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்த மாநாட்டில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பருத்தி விலை உயர்வதால் நூல் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பருத்தி விலை உயர்ந்தபோதும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை. இடைத்தரகர்கள் மட்டுமே உயர்ந்துள்ளனர்.

திருப்பூரின் தொழில் நிலையை உயர்த்த சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை என அனைத்து மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். இன்னும் நாடாளுமன்றத்தில் நல்லவை நடக்கிறது என்றால் அது கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எம்பிக்களால் மட்டுமே.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருகிறது, என்றார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...