நல்லது நடக்க தமிழக, கேரள எம்.பி.க்களே காரணம்..! - ஈரோட்டில் எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு!

நாடாளுமன்றத்தில் நடக்கும் நல்லவைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எம்.பிக்களால் மட்டுமே காரணம். ஆந்திரா,தெலங்கானா எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருவதாக எம்பி சு.வெங்கடேசன் பேச்சு.


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.



இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்களான கோவையைச் சேர்ந்த பி. ஆர்.நடராஜன், மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்த மாநாட்டில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பருத்தி விலை உயர்வதால் நூல் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பருத்தி விலை உயர்ந்தபோதும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை. இடைத்தரகர்கள் மட்டுமே உயர்ந்துள்ளனர்.

திருப்பூரின் தொழில் நிலையை உயர்த்த சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை என அனைத்து மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். இன்னும் நாடாளுமன்றத்தில் நல்லவை நடக்கிறது என்றால் அது கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எம்பிக்களால் மட்டுமே.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருகிறது, என்றார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...