உடுமலையில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை திறக்க கோரிக்கை

உடுமலையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறந்து செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் ரூ.8.50 லட்சம் செலவில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் கட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது.



இந்த நூலகத்தைச் சுற்றிலும் ராமசாமி நகர், தில்லை நகர், ருத்ரப்ப நகர், கங்காதரன் லே-அவுட் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதி உள்ளவர்கள் டவுனில் உள்ள நூலகங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகையால் இந்த நூலகத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...