திருப்பூர் அருகே தண்ணீர் ட்ரம் திருட்டு - வைரலாகும் வீடியோ

திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் மோகன் என்பவரின் வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்க வைத்திருந்த பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை, இரவு நேரத்தில் மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.



திருப்பூர்: காளம்பாளையத்தில் தண்ணீர் ட்ரம்மை மர்மநபர்கள் திருடிச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பி வைக்க பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை வைத்திருந்தார். இன்று அதிகாலை தண்ணீர் நிரப்ப வந்த பொழுது ட்ரம்மை காணவில்லை.



இதனையடுத்து அருகில் தேடிய அவர், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதில் மர்மநபர் ஒருவர் பிளாஸ்டிக் ட்ரம்மை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...