வளர்ப்பு கால்நடைகளை சொத்தாக குறிப்பிட்ட முன்னோர்கள் - உடுமலையில் கிடைத்த கல்வெட்டில் தகவல்!

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளில், வளர்ப்பு கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்ததும், நினைவு நடுகற்கள் வைத்து வழிபட்டதும் தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வு குழு தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிடைத்துள்ள பழங்கால கல்வெட்டுகள் மூலம் கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. உடுமலை பகுதியில் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து, பதிவு செய்யும் பணியில், உடுமலை வரலாற்று ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



அதன்படி வீரநாராயண பெருவழி, கொங்கப்பெருவழி மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.



குறிப்பாக, கோட்டமங்கலம், நீலம்பூர், மெட்ராத்தி போன்ற இடங்களில் கல் திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:

தற்போது, பாலக்காட்டுக் கணவாய் எனும் ஆனைமலை வழியாக செல்லும் பெருவழியான, பெரிய பாப்பனூத்து கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான பாறைக்கற்களும், சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் உள்ளன.

சிறு அளவிலான கற்களில், 'தமிழி' எழுத்தில் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. இது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுகளில், கோவிலுக்கு எழுதி வைத்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளாக இருக்கலாம்.

பெரியபாப்பனூத்துக்கு அருகில் கெடிமேடு பகுதியில் நிலைக்கற்கள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில், ஆடுகளையும் மாடுகளையும், கோழிகளையும், சேவல்களையும் தன்னுடைய சொத்துகளாக கருதி வளர்த்துள்ளனர்.

மேலும், கால்நடைகளுக்காக கல்வெட்டுகளையும், நினைவு நடுகற்கள் வைத்தும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு இதுபோன்ற ஆய்வில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...