வளர்ப்பு கால்நடைகளை சொத்தாக குறிப்பிட்ட முன்னோர்கள் - உடுமலையில் கிடைத்த கல்வெட்டில் தகவல்!

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளில், வளர்ப்பு கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்ததும், நினைவு நடுகற்கள் வைத்து வழிபட்டதும் தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வு குழு தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிடைத்துள்ள பழங்கால கல்வெட்டுகள் மூலம் கால்நடைகளை சொத்துக்களாக எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. உடுமலை பகுதியில் வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து, பதிவு செய்யும் பணியில், உடுமலை வரலாற்று ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



அதன்படி வீரநாராயண பெருவழி, கொங்கப்பெருவழி மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.



குறிப்பாக, கோட்டமங்கலம், நீலம்பூர், மெட்ராத்தி போன்ற இடங்களில் கல் திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:

தற்போது, பாலக்காட்டுக் கணவாய் எனும் ஆனைமலை வழியாக செல்லும் பெருவழியான, பெரிய பாப்பனூத்து கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான பாறைக்கற்களும், சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் உள்ளன.

சிறு அளவிலான கற்களில், 'தமிழி' எழுத்தில் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. இது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுகளில், கோவிலுக்கு எழுதி வைத்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளாக இருக்கலாம்.

பெரியபாப்பனூத்துக்கு அருகில் கெடிமேடு பகுதியில் நிலைக்கற்கள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில், ஆடுகளையும் மாடுகளையும், கோழிகளையும், சேவல்களையும் தன்னுடைய சொத்துகளாக கருதி வளர்த்துள்ளனர்.

மேலும், கால்நடைகளுக்காக கல்வெட்டுகளையும், நினைவு நடுகற்கள் வைத்தும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு இதுபோன்ற ஆய்வில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...