வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கண்டித்து உதகையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி உதகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுமானம், தொழிற்சாலைகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்கள் வருகையால் தமிழக தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானம் மற்றும் கேரட் தொழில்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மலை மாவட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.



இந்நிலையில், உதகையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினருடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் நிறுவன முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருவதால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அமைப்பு சாரா தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...