உடுமலை அருகே வறண்ட நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

உடுமலை அருகே நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் மக்கள் வசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் இன மக்கள் 50 பேர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும் நிலத்தில் வசிக்க அனுமதியளிக்க கோரி அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



உடுமலை அடுத்த லிங்கமநாய்க்கன் புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 10 வருட காலமாக வசிக்க இடமில்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் இன மக்கள் வசிக்க அனுமதி வழங்க கோரி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் அருந்ததியர் மக்கள் வசிப்பதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...