உடுமலை அருகே வறண்ட நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

உடுமலை அருகே நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் மக்கள் வசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் இன மக்கள் 50 பேர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும் நிலத்தில் வசிக்க அனுமதியளிக்க கோரி அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



உடுமலை அடுத்த லிங்கமநாய்க்கன் புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 10 வருட காலமாக வசிக்க இடமில்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் இன மக்கள் வசிக்க அனுமதி வழங்க கோரி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் அருந்ததியர் மக்கள் வசிப்பதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...