உடுமலை அருகே வறண்ட நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

உடுமலை அருகே நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் மக்கள் வசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் இன மக்கள் 50 பேர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும் நிலத்தில் வசிக்க அனுமதியளிக்க கோரி அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



உடுமலை அடுத்த லிங்கமநாய்க்கன் புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 10 வருட காலமாக வசிக்க இடமில்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் இன மக்கள் வசிக்க அனுமதி வழங்க கோரி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் அருந்ததியர் மக்கள் வசிப்பதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...