கோவையில் வழிப்பறியில் ஈடுபட முயற்சி - குருவி சுடும் துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலித்தொழிலாளிகள்!

கோவையில் குருவி சுடும் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற சமயபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கூலி வேலை செய்து வந்த நிலையில், குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்காக வழிப்பறியை தேர்வு செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக சென்ற போது, சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அந்த 3 பேரும் குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார், உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அந்த விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்களில், சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இந்த 3 பேரும் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வந்ததோடு, அவ்வப்போது குருவி சுடும் வேலையிலும் ஈடுபட்டுவந்துளள்னர்.

இந்த குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என அவர் திட்டமிட்டிருந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...