கோவையில் ‘பொது போக்குவரத்தை பாதுகாக்க’ விழிப்புணர்வு மாரத்தான் - மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

கோவையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் பொது போக்குவரத்தை காக்க வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 22 இடங்களில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

அதன்படி கோவையிலும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், "பொது போக்குவரத்தை பாதுகாக்க" என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வ.உ.சி மைதானம் பகுதியில் இந்த மாரத்தான் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை விபத்துகளை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்துதல், பலப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட CITU, SFI, ITDP, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இந்த மாரத்தான் போட்டியானது வ.உ.சி மைதானம் பகுதியில் துவங்கி, 5 கிலோமீட்டர் சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் முடிந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...