கோவை சம்பள உயர்வு பிரச்சனை - தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்!

கோவையில் சம்பள உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தி, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினமும் 721 ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



3வது நாளாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3வது நாளாகத்தொடரும் இந்தப் போராட்டத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகளை வார்டுகளுக்கு அழைத்துச் செல்வது, அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...