கோவை சம்பள உயர்வு பிரச்சனை - தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்!

கோவையில் சம்பள உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தி, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினமும் 721 ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



3வது நாளாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3வது நாளாகத்தொடரும் இந்தப் போராட்டத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகளை வார்டுகளுக்கு அழைத்துச் செல்வது, அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...