கோவை சம்பள உயர்வு பிரச்சனை - தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்!

கோவையில் சம்பள உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வலியுறுத்தி, இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினமும் 721 ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



3வது நாளாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.



இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 3வது நாளாகத்தொடரும் இந்தப் போராட்டத்தால், மருத்துவமனைகளில் நோயாளிகளை வார்டுகளுக்கு அழைத்துச் செல்வது, அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...