குன்னூரில் வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்ற வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



நீலகிரி: டெல்லியிலிருந்து திரும்பிய வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழமை மிக்கது. இந்த ராணுவ மையம் நாட்டிலே மிகவும் முக்கியமான ராணுவ மையமாகத் திகழ்ந்து வருகிறது. முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு ராணுவ பிரிகளின் சார்பாக பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடைபெற்றது.



இதில் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரஜி மெண்டல் சென்டர் பேண்ட் வாத்திய கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாம் இடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.



இசைக் குழுவினர் இன்று டெல்லியிலிருந்து குன்னூர் திரும்பினர்.



அப்போது ராணுவ முகாம் நுழைவு வாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



மேலும் ராணுவ வாகனத்தில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலிருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் இசைக்க வெற்றிக் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...